
கூரைகளெல்லாம் உடைந்து நொறுங்க,
கட்டிய சுவரெல்லாம் கரைந்தோட,
சன்னல் நிலைகளெல்லாம தூசாகி,
வாயிற் கொல்லை ஒன்றையொன்று தழுவ,
அடுக்களை அனல் அணைய,
கிணற்றடி ஈரம் காணாதுபோக,
அடித்தளமோ கூரைகும்பமோ இல்லாத
இன்மையை,
முழுமையை,
வீடென்கிறேன்…
— அயலவன்