Skip to main content

வாழ்தல் வசப்பட்டதே

62 words
Pallavaram Hills
Photograph: Neeraj Bharadwaaj

வாழ்தல் வசப்பட்டதே
வெண்ணிற வானமும் துளிர்விட்டதே
இருத்தல் இனித்ததே
இசையும் உடன்கலந்து உவப்புற்றதே
ஏடு எழுத்தால் நிறைந்ததே
மனவெளி சிந்தித்து செழிப்புற்றதே
அறியாமை அலாதியானதே
இருக்கையில் அறிவும் தோற்றுப்போனதே
கைக்குவளை தேநீர் துவண்டதே இளந்துவப்பு தேகத்தை கட்டியணைத்ததே
காற்றும் தழுவியதே
காலத்தின் கசிவாய் கதைசொன்னதே
உலகம் அழகானதே
உள்ளமோ அழகிலே மூழ்கி ஆட்டம்போட்டதே
தனிமை பொங்கிவழிந்ததே
உலகமே தனிமையில் அடங்கி ஒடுங்குதே
ஓசையும் இசையானதே
இசைக்கு இசைகையில் அலைமோதுதே
சுயம் அது மெழுகானதே
எரிந்து உருகியோடி உலகானதே
வாழ்தல் வசப்பட்டதே…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious