சொற்கள் சாகையில்தான் 
எழுத்து பிறக்கிறது. 
அமைதி கேட்கையில்தான் 
இசையும் ஒலிக்கிறது. 
கல்லும் கழிகையில்தான் 
சிலை எழுகிறது. 
சுயமும் சிதைகையில்தான் 
காதல் மலர்கிறது. 
கட்டடம் நொறுங்கையில்தான் 
வீடும் அணைக்கிறது. 
உள்ளம் உரிகையில்தான் 
எண்ணம் தோன்றுகிறது. 
படைப்பும் சாகையில்தான் 
கடவுள் பிறக்கிறது…
— அயலவன்