Skip to main content

இதில் எது புனிதம்?

56 words
poetry
Photograph: Vaibhav P.H

ஞானத்திடல் என்றெல்லாம் கூறி,
வேதப்பொருள் என்றெண்ணித் துதித்து,
ஓதியும், பாடியும் ஓங்காரமிட்டு,
தேடி நாடி ஓடிவந்துப் பணிந்திடும் மலை பின்புலத்தில் கிடக்க,

அடியார் வீட்டு மாடியில்,
தவிர்க்கவியலா அன்றாடமாய்,
அனுதினம் அமர்ந்து உய்க்கும் கழிப்பறை
கண்முன்னே கிடக்க
“இதில் எது புனிதம்? " என்ற கேள்வி மனத்தில் எழுந்தது.

ஆயிரமாயிரம் அடியார் பணிந்திடும் அண்ணாமலையா?
மலை பணிந்த அடியார் அனுதினம் புகும் கழிப்பறையா?, தன்னையே மரக்கும் அனுபவம் இவ்விரண்டிலும் உண்டென்ற பட்சத்தில்…

— அயலவன்

Neeraj Bharadwaaj
Author
Neeraj Bharadwaaj
Unapologetically curious